அம்பத்தூர்: ஆவடியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் இடைத்தது. அதன்பேரில், துணை கண்காணிப்பாளர் நாகராஜன் அறிவுறுத்தல்படி, இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் ஆவடி காமராஜர் நகர் சாலையில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த மினி லாரியை மடக்கி சோதனை நடத்தினர்.