சேலம்: சேலத்தில் கைதான வாலிபரை தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் நேரில் சந்தித்து பேசியது உளவுப்பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஆசிக்(23). இவர் சேலத்தில் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிக்கை தீவிரவாத கும்பலை சேர்ந்த ஒருவர் நேரில் சந்தித்துள்ள புது தகவல் வெளியாகியுள்ளது. வாலிபர் ஆசிக், சமூக வலைதளத்தின் மூலம் விளையாட்டுத்தனமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளார்.