கொடைக்கானல்: கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா பகுதிகளில் காட்டு மாடுகள் அதிகளவில் உலா வருகின்றன. அத்துடன் பொதுமக்களையும் தாக்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதியில் காட்டு மாடுகள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடி, அருகிலுள்ள இடங்களில் தஞ்சமடைந்தனர்.இதுபற்றி தகவலறிந்ததும் வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து காட்டு மாடுகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.