திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடி ஆற்று வெள்ளத்தில் சிக்கித் காட்டு யானை தவித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கேரளாவில் மழைப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்கள் மழைநீரில் தத்தளிக்கின்றன. இதுமட்டுமின்றி அங்குள்ள டம்கள் எல்லாம் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதேபோல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சூர் சாலக்குடி ஆற்று வெள்ளத்தில் நேற்று ஒரு யானை அடித்து வரப்பட்டுள்ளது.