சென்னை : நாளைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தொழிலாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தத்தின் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. ஆனால் சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன. இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.