சென்னை: பன்னீர்செல்வம் தலைமையிலான அணிதான் உண்மையான அதிமுக என்று கோவை செல்வராஜ் தெரிவித்திருக்கிறார். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தான்; இடையில் நடைபெற்ற நிகழ்வுகள் பதிவாகவில்லை.