மதுரை: மதுரையில் ஆடி மாதத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், இந்து சமய அறநிலையத்துறை இணைந்து ‘ஆடி அம்மன் சுற்றுலா’ நடத்தி வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில், காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ‘ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா’ நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். மதுரையில் பல்வேறு குடும்பத்தினர் பங்கேற்ற ஆடி அம்மன் சுற்றுலா தொடர்ந்து நடந்து வருகிறது.