காஞ்சிபுரத்தில் பதிவு செய்தவர்கள் செங்கல்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்: கலெக்டர் தகவல்

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 காஞ்சிபுரம் மாவட்டம், இரண்டாக பிரிக்கப்படதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் பிரிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 25ம் தேதி முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்குள் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தனியே செயல்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, மதுராந்தகம், பல்லாவரம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், திருப்போரூர், வண்டலூர் மற்றும் செய்யூர் வட்டங்களை சார்ந்த, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதார்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த பதிவுதாரர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.  ஏற்கனவே, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வருகைப்புரிந்து பதிவு சரிபார்த்தவர்களை தவிர்த்து ஏனைய பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து தங்களது பதிவினை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில்   கூறப்பட்டுள்ளது.

Related Stories: