வேலூர்: மாணவர்கள் பள்ளி சொத்துகளை சேதப்படுத்தினால் பெற்றோரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லாஉஷா வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் பள்ளி சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரே பொறுப்பு ஏற்றி அவற்றை மாற்றி தர வேண்டும். மாணவர்கள் பஸ்களில் தொங்கிக்கொண்டு செல்வது, ஆசிரியர்களை அவமதித்தல், ராக்கிங் செய்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், வகுப்பு நேரங்களில் வீடியோ ரீல்களை உருவாக்குதல், சாதி, மதம், பொருளாதார அடிப்படையில் புண்படுத்துதல், கேலி செய்தல், பள்ளி சுவர்களில் தவறான வார்த்தை, படங்களை எழுதுதல் என ஏதேனும் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு பள்ளி ஆலோசகர் முதலில் ஆலோசனை வழங்க வேண்டும்.