சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்திருக்கிறது. சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள் நீண்ட காலமாக வாடகை மற்றும் குத்தகை பணம் செலுத்தாமல் இருப்பதாக சொல்லி சூளையை சேர்ந்த சுகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலைத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த நடவடிக்கையயை விரைவுப் படுத்த வேண்டும் என்று 2021 ஆண்டு, ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் உயர்நீதி மன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.