கும்பகோணம்: கும்பகோணத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென இடியுடன் மழை பெய்தது. இதில் கும்பகோணம் ராமசாமி கோயில் வடக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்தில் இடி தாக்கியது. இதனால் கோபுரத்தின் உச்சியில் மேற்கு பகுதியில் உள்ள மகா நாசி என அழைக்கப்படும் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பலத்த சத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து காவலாளி சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது கோயில் கோபுரத்தில் இருந்த சுதை சிற்பத்தின் ஒரு பகுதி இருந்து கீழே விழுந்திருப்பது தெரிய வந்தது.