சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள் இலவச விமான பயணம் செய்தனர். 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ-மாணவி மாணவிகளுக்கு இலவச விமான பயணத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. பள்ளிகளில் செஸ் விளையாட்டு போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்று தேர்வு 149 மாணவர்கள் செய்யப்பட்டனர். தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானத்தில் 149 மாணவர்கள், 5 ஆசிரியைகள் உள்பட மொத்த 154 பேர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து சென்றனர். இந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிவந்தது.