கேளம்பாக்கத்தில் செஸ் ஒலிம்பியாட் செல்பி மையம் திறப்பு

திருப்போரூர்: சர்வதேச செஸ்  ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் கேளம்பாக்கம் ஊராட்சி சார்பில்  அமைக்கப்பட்டுள்ள செல்பி மையத்தை  திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன்  திறந்து வைத்தார்.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் கேளம்பாக்கத்தில் 2 இடங்களில் செஸ் ஒலிம்பியாட் செல்பி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு, கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், கேளம்பாக்கம் பஸ் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் செல்பி மையங்களை திறந்து வைத்தார். இந்த மையங்களில் புகைப்படம் எடுத்து அதை இணைய தளத்தில் பதிவு செய்து அதிக லைக் பெறும் படத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் ராணி அறிவித்துள்ளார். விழாவில், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவர் பாஸ்கரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: