சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் நாளை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் வட தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும்.