ஓரிகான்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். அமெரிக்காவில் ஓரிகான் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. முன்னதாக நடந்த ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோகித்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அதில்; 88.13 மீட்டர் தூரம் எரிந்து நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.40 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தங்கப்பதக்கம் வென்றார்.