கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது. உள்ளூர் மக்கள், உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரியநெசலூர் இடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக மயானத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீமதியின் உடல் சற்று நேரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. உறவினர்கள், கிராம மக்கள் கண்ணீர்அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.