காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக பாஜ போராட்டம் நடத்துமா?: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: சென்னை புளியந்தோப்பில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான துணை மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:  கடந்த 10 ஆண்டுகளில் மின்சார துறைக்கு ஏற்பட்ட இழப்பு, வட்டி உயர்வு எவ்வளவு என்பது குறித்து தெரிய வேண்டும். அதிமுக ஆட்சியின் நிர்வாக கோளாறு காரணமாக கடன் சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் 2012, 2013, 2014ல் தொடர்ந்து 37% மின் கட்டணத்தை  உயர்த்தியுள்ளனர்.

Related Stories: