வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு: மநீம வரவேற்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை தொடங்கும்படி மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. இந்த நடவடிக்கை போலி வாக்காளர்களை நீக்க உதவும், கள்ள ஓட்டுகளை தடுக்கும்.  அதே நேரத்தில்,  வாக்காளரை வற்புறுத்தி ஆதார் எண்ணை பெறக்கூடாது. முழு சம்மதத்துடன் பெற வேண்டும் என்று இந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படும்  என்பதை தேர்தல்  ஆணையம் உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகத்தின் அடிநாதமான ‘நேர்மையான தேர்தலுக்கு’ இதுபோன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். ஒன்றிய, மாநில அரசுகள் இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மநீம அப்பணியை தொடர்ந்து செய்யும்.

Related Stories: