அதிமுக-வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியிலிருந்து நீக்குவதா? .: ஓபிஎஸ் மகனுக்கு சசிகலாவின் வெளிப்படையான ஆதரவால் பரபரப்பு

சென்னை: அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியிலிருந்து நீக்குவதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியாக ஈபிஸ் கடிதம் எழுதிய நிலையில் சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, நாடாளுமன்றத்தில் அதிமுக பெயரை சொல்ல யாருமே வேண்டாம் என்ற கண்மூடித்தனமான முடிவு நியாயமற்றது. மேலும் ரவீந்திரநாத் எம்.பி.யை செயல்படவிடாமல் தடுத்து வைப்பது தவறானது. தன சொந்த விருப்பத்திற்காக நாடாளுமன்றத்தின் மக்களவையில் கட்சியின் அங்கீகாரத்தையே அளிக்க நினைப்பதா? என அவர் காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்று சொல்பவர்களை கட்சித் தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள். ஒரு மரத்தின் உச்சியில் உக்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகின்ற அறிவற்ற செயலே இவர்களுடையது. இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை, பதவியினை தட்டிப் பறிக்க வேண்டும் என செயல்படுவர்களை பற்றி தொண்டர்கள் கவலைப்பட வேண்டும் என வி.க.சசிகலா அந்த அறிக்கையில் கூறியுள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி-க்கு வெளிப்படையாக சசிகலா ஆதரவு தெரிவித்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: