அமராவதி: ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர்களின் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. வெள்ளம் இன்னும் வடியாத நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ரஜூலு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளை முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசக்கட்சி தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் நேற்று பார்வையிட்டனர். சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசக்கட்சி தலைவர்கள் ஒரு படகிலும், முன்னாள் அமைச்சர்கள் மற்றொரு படகில் பயணம் செய்தனர். அயோத்தியலங்காவிலிருந்து சோம்பள்ளி கிராமத்தை நோக்கி முன்னாள் அமைச்சா்கள் சென்ற படகு கரையை நெருக்கிய போது பாரம் தாங்காமல் கவிழிந்தது.