கோத்தகிரி: கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான தட்டப்பள்ளம், முள்ளூர், மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் அதிகம் காய்ந்துள்ளது. இதனால், பலா பழங்களை ருசித்து பசியாறுவதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானை கூட்டங்கள் தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது. இதனால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது யானை கூட்டம் இடையூறு செய்து உயிர்பயம் காட்டி வருகிறது. அப்போது, அங்கிருந்து வாகன ஓட்டிகள் மிரண்டு ஓட்டம் பிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.