வாஷிங்டன்: தைவான் பிரச்சனை மற்றும் பரஸ்பர வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா சீனா இடையே பிணக்கம் நிலவி வரும் வேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பைடன்; அடுத்த 10 நாட்களுக்குள் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி வழியே பேச இருப்பதாக கூறினார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மேனியர் உச்சி மாநாட்டிற்கு பிறகு அமெரிக்கா, சீனா நாடுகளின் தலைவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலோசி சமீபத்திய தைவான் பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.