டெல்லி: அமலாக்கத்துறையின் அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி அடிபணியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங். தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை சம்மனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜரானார். சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜம்மு, கேரளா, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் காங். கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.