ஐதராபாத், : ‘புஷ்பா’ படத்தின் 3ம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் பஹத் பாசில் தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, சமந்தா நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றிபெற்றது. இந்நிலையில், ‘புஷ்பா’ 2ம் பாகத்தை உருவாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பு இந்தியாவில்உள்ள அடர்ந்த காடுகள் மற்றும் அதைச்சுற்றி யுள்ள பகுதிகளிலும், பிறகு கிழக்கிந்திய ஆசிய நாடுகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மலையாள நடிகரும், சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடித்தவருமான பஹத் பாசில், ‘புஷ்பா’ முதல் பாகத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.