15வது திமுக அமைப்பு தேர்தல் வரும் 22ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்: அமைச்சர் நாசர் தகவல்

ஆவடி: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய பகுதிகளின் 15வது திமுக அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தலைமை கழகத்தால் தேர்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ள தலைமை கழக பிரதிநிதி எஸ்.ஆஸ்டினிடம் வேட்பு மனுக்களை பெற்று பூர்த்தி செய்து, உரிய கட்டணத்துடன் திருப்பி வழங்கவேண்டும். ஆவடி ரயில் நிலையம் அருகேயுள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் வரும் 22ம் தேதி முதல் விண்ணப்ப படிவம் விநியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: