கனியாமூர் பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: கனியாமூர் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, டி.ஜி.பி. சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. தேவ ஆசீர்வாதம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பள்ளியில் நடந்த வன்முறை குறித்தும், மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்க குழு அமைக்கலாமா? உள்ளிட்டவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Related Stories: