போபால்: மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பயணிகள் பலியானார்கள். மேலும் 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் நேற்று காலை மத்தியப்பிரதேசம் இந்தூரில் இருந்து புறப்பட்டது. இந்த பஸ்சில் சுமார் 32 பயணிகள் பயணம் செய்தனர். ஆக்ரா-மும்பை சாலையில் தேசிய நெடுஞ்சாலை 3ல் உள்ள மேம்பாலத்தின் மீது வந்தபோது, பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைநடுமாறிய பேருந்து பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.