திருவள்ளூர்: மாநகர பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி டிரைவர்களும் கண்டக்டர்களும் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தி.நகரில் இருந்து மாநகர பேருந்து இன்று காலை திருவள்ளூர் நோக்கி சென்றது. பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தை சேர்ந்த துரை டிரைவராக இருந்தார். கண்டக்டராக செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்த காத்தவராயன் (50) பணியாற்றினார். திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தபோது அங்குள்ள ஸ்டாப்பில் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் கடும் ஆத்திரம் அடைந்ததுடன் அந்த பஸ்சை மறித்து வாக்குவாதம் செய்ததுடன் டிரைவர் துரையை தகாத வார்த்தையால் பேசி தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.