சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை வெளியேற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளதால் அவர் விரைவில் கொழும்பு திரும்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக மக்களின் எழுச்சி மிகு கிளர்ச்சி எதிரொலியாக கடந்த 13ம் தேதி நாட்டை விட்டு தப்பி சென்றார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே. மாலத்திதீவுக்கு சென்ற கோத்தபயவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அவரை நாட்டுக்குள் அனுமதித்த சிங்கப்பூர் அரசு அடைக்கலம் தர திட்டவட்டமாக மறுத்துவிட்டது.