ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பணிமனை அருகில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி 15ம் தேதி கணபதி பூஜை, அக்னி பிரதிஷ்டை, நவக்கிரக ஹோமம் ஆகியவையும் மாலை வாஸ்து பூஜையும், வாஸ்து ஹோமம் ஆகியவையும் நடத்தப்பட்டது. நேற்று கரிகோலம் திரிதியை கால பூஜை, ஜலதிவ்யாசம், மாலை சதுர்த்த கால பூஜையும், யாகசாலை பூஜை நடைபெற்றது.