வன்முறை கலவரத்திற்கு பாதுகாவலர்களை பயன்படுத்தியுள்ளார் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும்: டிஜிபியிடம் ஆதிராஜாராம் மனு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்கி கலவரத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் தன்னுடைய பாதுகாவலர்களை பயன்படுத்தியதால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை தமிழக காவல்துறை திரும்ப பெற வேண்டும் என்று நேற்று டிஜிபியிடம் அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் தென் சென்னை மாவட்ட செயலாளருமான ஆதிராஜாராம் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ரவுடிகளை கொண்டு பொதுச் சொத்தை சேதப்படுத்தி பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகள், வாகனங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது மட்டும் இல்லாமல், கலவரத்தை தூண்டியது மற்றும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டிய கதவுகளை உடைத்து உள்ளே சென்று பொருட்களை சேதப்படுத்தி ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வன்முறை கலவரத்திற்கு தன்னுடன் உள்ள பாதுகாப்பு காவலர்களை பயன்படுத்தியதால் சட்டப்படி அவர் போலீஸ் பாதுகாப்பு பெற தகுதி இழக்கிறார். எனவே ஓ.பன்னீர்செல்வத்திற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட பாதுகாப்பு காவலர்களை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: