நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓடும் பேருந்தில் எற முயன்ற முதியவரை அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கினார். சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ராசிபுரத்தை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தில் ஒருவர் எற முயன்றபோது தடுமாறியதாக கூறப்படுகிறது இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் முரளி கிருஷ்ணா முதியவரை தகாத வார்த்தையால் திட்டிள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் முதியவரை சராமரியாக தாக்கியுள்ளார்.