சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் மாலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்’ என அவர் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நலம்பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.