கீவ்: உக்ரைனில் அதிநவீன ஏவுகணை தாக்குதல் மூலமாக ஒரே நாளில் 420 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் உக்கிரமான போர் 130 நாட்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காகவே வேகமாக முன்னேறி வரும் ரஷ்ய படைகள் நாட்டில் பிற பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு உக்ரைனில் இருக்கும் மைக்கோலைவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.