தமிழகத்தின் ராஜபக்சேவாக எடப்பாடி உருவாகி உள்ளார்: தினகரன் தாக்கு

திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் அமமுக நிர்வாகி இல்ல துக்க நிகழ்ச்சிக்கு நேற்று வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பேடடி: பொதுக்குழுவை கூட்டி தன்னை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்து கொண்டுள்ளார். ஜெயலலிதா வளர்த்த இயக்கம் தற்போது வீழ்ச்சி பாதையில் செல்கிறது. தலைமை கழகத்தை சீல் வைத்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்தை அமைதியான வழியில் விட்டிருந்தால் இந்த பிரச்னை நடந்திருக்காது. எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சேவாக உருவாகியுள்ளார். இலங்கையில் எப்படி ராஜபக்சே நாட்டை விட்டு ஓடினாரோ அதேபோல் எடப்பாடியை கட்சியிலிருந்து விரட்டி அடிக்கும் காலம் வரும். சசிகலா சட்டரீதியாக போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் பிரிந்தவர்கள் கட்சி ரீதியாக இணைகிறார்கள்.

Related Stories: