திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரில் அமமுக நிர்வாகி இல்ல துக்க நிகழ்ச்சிக்கு நேற்று வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பேடடி: பொதுக்குழுவை கூட்டி தன்னை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்து கொண்டுள்ளார். ஜெயலலிதா வளர்த்த இயக்கம் தற்போது வீழ்ச்சி பாதையில் செல்கிறது. தலைமை கழகத்தை சீல் வைத்துள்ளனர்.