நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தென்மேற்கு பருவமழையின் தாக்கல் அதிகரித்து காணப்படுகிறது. குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுக்காக்களில் மழை கொட்டி வருகிறது. பகல் நேரங்களில் மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், இரவு நேரங்களில் அதிகமாக மழை பதிவாகி வருகிறது. உதகை, குந்தா தாலுகாக்களில் உள்ள பகுதிகளில் தினந்தோறும் 5 செ.மீ க்கு மேல் பதிவாகி வருகிறது.