திருவள்ளூர்: திருவள்ளூரில் சாலையில் நடந்து சென்ற வாலிபரை மடக்கி கத்தியால் கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்ராஜன்(22), நேற்று காலை திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தை அருகே சொந்த வேலையாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் கையில் மது பாட்டிலுடன் மது அருந்தியவாறு தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு அவ்வழியே வந்துள்ளனர். இதனைக்கண்ட சதீஷ்ராஜன், `ஏன் இப்படி பேசுகிறீர்கள்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த 3 நபர்களும் சதீஷ்ராஜனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் பலமாக தாக்கிவிட்டு இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து வெட்டி கொல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்ராஜன் அவர்களிடம் இருந்து தப்பினார்.