திருச்செந்தூர் அருகே பயங்கரம்; நாடார் மக்கள் இயக்க நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே நாடார் மக்கள் இயக்க மாநில செயலாளர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (45). நாடார் மக்கள் இயக்க மாநில செயலாளர். இவரது மனைவி மரிய நிர்மலா தேவி, ஆறுமுகநேரி பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலராக உள்ளார். சரவணக்குமாருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.

இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது.

இவருக்கு அம்மன்புரத்திலும் நிலங்கள் உள்ளன. நேற்று காலை அம்மன்புரம் வந்த சரவணக்குமார் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். சரவணக்குமாரின் கொலைக்கான காரணம், உடனடியாக தெரியவில்லை. அவர் நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: