லூதியானா: பாடகர் கொலை வழக்கில் தொடர்புடைய சிறை கைதியை, சக கைதிகள் சரமாரியாக அடித்து தாக்கியதால் அவனின் மண்டை உடைந்தது. தற்போது அவனுக்கு லூதியானாவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் கடந்த மே 29ம் தேதி பிரபல பாடகர் சித்து மூசே வாலா மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ்-கோல்டி பரத் கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளான அங்கித் சிர்சா (19), சச்சின் பிவானி (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கடந்த மாதம் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.