பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளிவந்த பிறகு 5 நாள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார். 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்று அவகாசம் முடிந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: