செய்யூர்: கடப்பாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் மற்றும் கங்கை அம்பிகை, பராசக்தி அம்பிகை கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில் பிரத்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் மற்றும் கங்கை அம்பிகை, பராசக்தி அம்பிகை கோயில்கள் உள்ளன. இந்த பழமை வாய்ந்த 2 கோயில்களும் புனரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாகவும் நடந்தது. விழாக்களை ஒட்டி கடந்த 30ம் தேதி முதல் மேளத்தாலங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு, தினமும் கால பூஜைகள், கிராம தேவதைகள் வழிபாடு, வாஸ்து சாந்தி, கோ பூஜை, சுமங்கலி பூஜை, அம்மன்களுக்கு விசேஷ தீபாராதனைகள் நடத்தப்பட்டன.