பொதுப்பணி துறையில் 13 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

சென்னை: பொதுப்பணி துறையில் 13 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 13  உதவி பொறியாளர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் தயானந்த் கட்டாரியா, முதன்மைத் தலைமைப் பொறியாளர் விஸ்வநாத் மற்றும் இணைத் தலைமைப் பொறியாளர்கள் சி.இசைஅரசன், என்.தில்லைக்கரசி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: