சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு தலைவராக ரஞ்சன் குமாரை கட்சி தலைமை நியமித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு தலைவராக செல்வப்பெருந்தகை பதவி வகித்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக இதே பொறுப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவுக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.