சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான தாள் I வரும் ஆகஸ்ட் 25 முதல் 31ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II 2022ம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க காலஅவகாசம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி வரை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் Iக்கு 2,30,878 பேரும், தாள் IIக்கு 4,01,886 பேர் என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.