சென்னை: ஹேம்நாத்தை வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது என்று தற் கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் தந்தை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்த சித்ராவின் தந்தை காமராஜும் ஹேம்நாத் மனுவில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.