சென்னை: அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் நியமனம் செய்வதற்கான கவுன்சலிங் 11ம் தேதி முதல் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக் கல்வித்துறையில் அரசு, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அதன் ஊட்டுப் பகுதியிலிருந்து பதவி உயர்வு நியமனம் செய்ய வசதியாக பதவி உயர்வு கவுன்சலிங் இணைய தளம் மூலம் 11ம் தேதியில் இருந்து நடக்கிறது.