சென்னை: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா சந்தித்து ஆதரவு கோரினார். கலைஞர் அரங்கத்தில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். யஷ்வந்த் சின்ஹாவை வாழ்த்தி திமுக கூட்டணித் தலைவர்கள் பேசி வருகின்றனர்.