குறைதீர்க்கும் கூட்டம்: மின்வாரியம் அழைப்பு

சென்னை: எழும்பூர், பெரம்பூரில் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டங்களில் கலந்துகொண்டு நிவாரணம் பெறலாம் என மின்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எழும்பூர் கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11.00 மணிக்கு எண்.47, மலையப்பன் தெரு, ஓட்டேரி, சென்னை-12ல் நடக்கிறது. இதேபோல் பெரம்பூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11.00 மணிக்கு செம்பியம் துணை மின்நிலையம் வளாகம், எம்.ஈ.எஸ் ரோடு, சென்னை-11ல் நடக்கிறது. எனவே பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: