சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை அமைச்சர் தலைமையில் பதிவுத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. பின்னர், அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரூ.4,213 கோடி வருவாய் வந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட பத்திரப்பதிவு துறையில் ரூ.2,100 கோடியாக உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு விலை மதிப்பீடு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய வருபவர்களுக்கு இடைத்தரகர்கள் துணை இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் பத்திரப்பதிவு நடைபெறுவதால் வருவாய் உயர்ந்துள்ளது. மேலும், ஆவண எழுத்தர்கள் எண்ணிக்கையை உயர்த்த, தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் உரிமை வழங்கப்பட இருக்கிறது.