டெல்லி: ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை குடியரசு தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதி நிறைவடைகிறது. ஏற்கனவே குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற்று 23ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நாட்டின் 16வது துணை குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.